தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் காயம்

Advertisement

திருவொற்றியூர்: மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளிகள் படுகாயமடைந்தனர். திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தம் சந்திப்பில் பல கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் இணைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை மழை நீர் வடிகால் இணைப்பிற்காக காங்கிரீட் சுவர்கள் உடைக்கும் பணியில் மணலியைச் சேர்ந்த மணிகண்டன்(31), தென்காசியைச் சேர்ந்த குருசாமி(42) ஆகியோர் ஈடுபட்டனர். ட்ரில்லிங் மிஷினை வைத்து சுவரை உடைக்க முயன்றபோது, தரையில் புதைக்கப்பட்டிருந்த மின் ஒயரில் உரசி இருவரும் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தனர்.

சத்தம் கேட்டு அருகே இருந்த கரும்பு ஜூஸ் கடைக்காரர் குமார் என்பவர் மயங்கி கிடந்த இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டு வெளியே கொண்டு வந்தார். பின்னர் சிகிச்சைக்காக இருவரையும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் மின் ஒயரில் உரசியபடி இருந்த டிரில்லிங் மிஷினில் இருந்து புகையுடன் தீ கிளம்பியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மின்சாரத்தை துண்டித்து ட்ரில்லிங் மிஷினை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News