தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாத இறுதிக்குள் வடிகால் பணி முடிக்கப்படும்: மேயர் பிரியா பேட்டி

பெரம்பூர், ஆக.2: கொளத்தூரில் உள்ள ஜம்புலிங்கம் பிரதான சாலையில் மாநகராட்சி சார்பில், நவீன வசதியுடன் ரூ.13 கோடியில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மேயர் பிரியா மற்றும் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். இதையடுத்து, கொளத்தூர் சோமையா தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 10 வகுப்பறைகள் கொண்ட சென்னை உயர்நிலைப் பள்ளி கட்டுமான பணி, கொளத்தூரில் உள்ள ரங்கசாமி தெருவில் கட்டப்பட்டு வரும் சென்னை நடுநிலைப் பள்ளிக்கான கட்டிடம் ஆகியவற்றை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் முக்கியமான பகுதிகளில் மழைநீர் வடிக்கால் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. உட்புற பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து வடிகால் பணிகளும் முடிக்கப்படும். மழைக்காலத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வோம், என்றார்.

Related News