தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாநகராட்சி ஒப்பந்ததாரரை வெட்டிய வாலிபருக்கு வலை

 

பெரம்பூர், ஆக.4: வியாசர்பாடி பி.வி.காலனி 19வது தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (56), சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர். இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது நண்பர்களுடன் அதே பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, ராமச்சந்திரனின் தங்கை மகன் பிரதீப் இவருடன் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் ராமச்சந்திரனின் தோள்பட்டையில் வெட்டியுள்ளார்.

இதில் காயமடைந்த ராமச்சந்திரன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் வீராசாமி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து வியாசர்பாடி பி.வி.காலனி 29வது தெருவைச் சேர்ந்த பிரதீப்குமார் (19) என்பவரை தேடி வருகின்றனர்.

 பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் யுவனேஸ்வரன் (22). சரித்திர பதிவேடு ரவுடியான இவர் மீது 12 குற்ற வழக்குகள் உள்ளன. இந்நிலையில், மதுபோதையில் பொதுமக்களை அச்சுறுத்துவதாக செம்பியம் போலீசார் யுவனேஸ்வரனை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியை சேர்ந்த மாதவனை (24), கடந்த 26ம் தேதி ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக தாக்கிய வழக்கில் மணி பிரசாத், ராகுல், அருண்(எ) இமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியை சேர்ந்த நவீன் (19) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related News