104 சவரன் கொள்ளையில் ஆட்டோ டிரைவர் கைது
Advertisement
மேலும் வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சித்தாலப்பாக்கம் கன்னிக்கோயில் தெருவில் உள்ள ஆட்டோ டிரைவர் ஆரோக்கியராஜ் (45), என்பவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை, தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின் பேரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 104 சவரன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர். அவர் மீது 2022ம் ஆண்டு ஒரு கஞ்சா விற்ற வழக்கு இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
Advertisement