தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையான வங்கி அதிகாரிக்கு ரூ.3 கோடி இழப்பீடு: ஆம்புலன்சில் சேலத்துக்கு சென்று காசோலை வாங்கினார்

சென்னை : சென்னை கொளத்தூர் கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் இர்பான். இவரது மனைவி கவிதா (46). இவர் தனியார் வங்கியில் துணைத்தலைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு மாதம் ரூ.2.50 லட்சம் சம்பளம். கடந்தாண்டு செப்டம்பர் 13ம் தேதி வங்கி அதிகாரியான கவிதா காரில் கோவை சென்று கொண்டிருந்தார். அப்போது கவனக்குறைவால் கார் நிலைதடுமாறி சாலையின் சுற்றுச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் கவிதா படுகாயம் அடைந்தார். விலா எலும்புகள் முதுகுதண்டு ஆகியவை கடும் சேதம் அடைந்தது. மருத்துவமனையில் சேர்த்தும் குணமடையவில்லை. தொடர்ந்து படுத்த படுக்கையானார். அவரை கணவர் மற்றும் குடும்பத்தினர் கவனித்து வருகின்றனர்.

இதையடுத்து இழப்பீடு கேட்டு கவிதா சேலம் மோட்டார் வாகன விபத்துகளுக்கான சிறப்பு சார்பு நீதிமன்றம் 2ல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வந்தது. இதில் இன்சூரன்ஸ் நிறுவனமும் கவிதா தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கவிதாவுக்கு ரூ.3கோடி இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது. இதையடுத்து சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கவிதா சேலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். மாவட்ட முதன்மை நீதிபதியும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுமதி ஆம்புலன்ஸ் உள்ளே சென்று ரூ.3 கோடிக்கான காசோலையை அவரிடம் வழங்கினார்.

Related News