விக்கிரமங்கலம் அருகே பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி பலி
தா.பழூர், ஜூலை. 24 ; அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் அரசுக்காரன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள் (55) விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியினால் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்து (விஷம்)குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதை கண்ட உறவினர்கள் கலியபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கலியபெருமாள் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.