தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிரீடு வேளாண் மையம் சார்பில் பயறு சாகுபடி தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு ஆலோசனை

 

தா.பழூர், ஆக.1: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையம் சார்பில் விவசாயிகளுக்கு பயறு சாகுபடி குறித்த தொழில்நுட்பம் அளிக்கப்பட்டது. இதில் உளுந்து சாகுபடியில் நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையினால் உளுந்தின் தரம், அளவு மற்றும் எடை சுமார் 10-15% வரை குறையும்.

உளுந்து சாகுபடியில் பூ உதிர்வது தடுக்கவும், அதிக பூக்கள் பிடிக்கவும், காய் பிடிக்கும் திறனை அதிகரிக்கவும், வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கவும் டிஎன்ஏயூ என்ற பயறு அதிசயம் மருந்து (TNAU Pulse wonder) தெளிக்க வேண்டும். இதனை ஒரு ஏக்கருக்கு 2 கிலோ பயறு அதிசயம், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டி நன்கு பூ பிடிக்கும் தருவாயில் (30-35 நாட்கள்) தெளிக்க வேண்டும்.

தெளிக்கும் போது, ஒட்டு திரவத்தை (0.5 மிலி/லிட்டர் நீர்) சேர்த்து தெளிக்க வேண்டும். மேலும் இதனுடன் எவ்வகையான பூச்சி மற்றும் நோய் மருந்துகளை கலந்து தெளிக்க கூடாது. ஒரு ஏக்கருக்கு தெளிப்பதற்கு 2 கிலோ தேவைப்படும். ஏக்கருக்கு ஆகும் செலவு ரூ.550. மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு உழவியல் தொழில்நுட்ப வல்லுனர் திருமலைவாசன் 9688810919 என்பவரை தொடர்பு கொண்டு விவசாயிகள் சந்தேகங்களை கேட்டு பயன்பெறலாம். இவ்வாறு கிரீடு வேளாண் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் தெரிவித்துள்ளார்.

 

Related News