தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தயிர் தம் பிரியாணி

தேவையான பொருட்கள்:

Advertisement

சீரகச் சம்பா அரிசி - 1/2 கிலோ

தயிர் - 400 கிராம்

விருப்பமான காய்கறிகள் - 1/4 கிலோ

வெங்காயம் - 1/4 கிலோ

இஞ்சிப் பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

முட்டை - 2

பச்சை மிளகாய் - 3

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

பட்டை - 1

லவங்கம் - 7

ஏலக்காய் - 5

முந்திரி - 10

கொத்தமல்லி & புதினா - ஒரு கைப்பிடி

நெய் - 50 மி. லி.

தேங்காய் எண்ணெய் - ஒரு குழி கரண்டி

உப்பு - தேவையான அளவு

பிரியாணி இலை - 2.

செய்முறை :

காய்கறிகளை தண்ணீர் ஊற்றி பிரியாணி இலை, பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்து உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரி ஆகியவற்றை லேசாக வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வதக்கிய அதே கடாயில் தயிர் மற்றும் முட்டை சேர்த்து நன்கு கிளறவும். முட்டை தயிருடன் கலந்து வெந்ததும், சோம்புத் தூள், சீரகத்தூள், வேக வைத்த காய்கறிகளை அதனுடன் சேர்க்கவும். பிறகு அரைத்த வெங்காயம் விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்த்து அரிசிக்கு தேவையான தண்ணீரும் சேர்த்து புதினா மல்லி இலைகளை தூவி கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் அரிசி சேர்த்து, நெய் ஊற்றி தம் கட்டி இறக்கவும். சுவையான தயிர் தம் பிரியாணி தயார்.

Advertisement