தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிராமத்து முறை திருக்கை மீன் குழம்பு

தேவையான பொருட்கள்

1கிலோ திருக்கை மீன்

15 சிறிய வெங்காயம்

2தக்காளி

எலுமிச்சை அளவுபுளி

4பச்சை மிளகாய்

10பூண்டு பல்

1ஸ்பூன் சீரகம்

1ஸ்பூன் சோம்பு

21/2டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்

21/2டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்

1ஸ்பூன் மஞ்சள் தூள்

1மாங்காய் (விருப்பம்)

நல்லெண்ணெய்

உப்பு

1/2ஸ்பூன் வெந்தயம்

2கொத்து கருவேப்பிலை

1ஸ்பூன் மிளகு தூள்

செய்முறை:

பூண்டை அம்மியில் வைத்து லேசாக நைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் அம்மியில் சோம்பு, சீரகம் வைத்து லேசாக தண்ணீர் தெளித்து நைசாக அரைத்து கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் (முழு மஞ்சள், காய்ந்த மிளகாய், முழு தனியா பயன்படுத்தலாம்) ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.பின்னர் ஒரு மண் சட்டியில் நல்லெண்ணெய் விட்டு நன்கு சூடானதும் வெந்தயம் சேர்த்து தாளிக்கவும். பின் நைத்து வைத்துள்ள பூண்டு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் தக்காளி மற்றும் கல்லுப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து 3நிமிடம் நன்றாக வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்னர் புளிக் கரைசலை சேர்த்து மூடி நன்றாக பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.பின்னர் நறுக்கிய மாங்காய் மற்றும் அரைத்த மிளகு தூள் சேர்த்து 2நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கிராமத்து திருக்கை குழம்பு தயார்.

 

Related News