தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கிராமத்து வெண்டைக்காய் காரக்குழம்பு

தேவையான பொருட்கள்:

1/4கி வெண்டைக்காய்

1எலுமிச்சை அளவு புளி

3ஸ்பூன் எண்ணெய்

1ஸ்பூன் கடுகு

1கொத்து கறிவேப்பிலை

1/4ஸ்பூன் வெந்தயம்

1பெரிய வெங்காயம்

1தக்காளி

10சாம்பார் வெங்காயம்

1ஸ்பூன் சீரகம்

1/2மூடி தேங்காய்

1ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்

1ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்

1/4ஸ்பூன் மஞ்சள் தூள்

தேவையானஅளவு உப்பு

செய்முறை:

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காய் நறுக்கிய பெரிய வெங்காயம் வெந்தயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வெண்டைக்காயுடன் வெங்காயமும் வெந்தயமும் சேரும்போது வதக்கும் போதே மணம் அருமையாக இருக்கும். புளியை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கரைத்துக்கொள்ளவும் அத்துடன் மிளகாய் தூள் இரண்டையும் சேர்த்து மஞ்சள் தூளையும் சேர்த்து கொதிக்கவிடவும்.காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.காரம் அதிகமாக தேவை என்றால் இன்னும் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும்போது அத்துடன் தக்காளியும் சேர்த்து கொதிக்க விடவும்.மிக்ஸி ஜாரில் தேங்காய் வெங்காயம் சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.. அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அத்துடன் தேவையான உப்பையும் சேர்க்கவும்.வெண்டைக்காய் குழம்பு கொதித்த பிறகு தான் சேர்க்க வேண்டும் முதலிலேயே சேர்த்து விட்டால் குழம்பு கொழகொழவென்று ஆகிவிடும்.குழம்பின் பச்சை வாசனை போன பிறகு அதில் வெண்டைக்காய் சேர்த்து வேகவிடவும். வெண்டைக்காய் ஏற்கனவே வதக்கி இருப்பதால் அது பாதி வெந்திருக்கும் அதனால் சிறிது நேரம் வேக விட்டால் போதுமானது.குழம்பு கொதித்து கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.இப்போது சூடான சுவையான காரசாரமான கிராமத்து வெண்டைக்காய் கார குழம்பு தயார்.

Related News