தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தக்காளி உப்புமா

Advertisement

தேவையான பொருட்கள்:

1 கப் ரவை

1 பெரிய வெங்காயம்

2 நறுக்கிய தக்காளி

1/2 ஸ்பூன் கடுகு

1/2 ஸ்பூன் சீரகம்

1/2 ஸ்பூன் மஞ்சள்

1/2 ஸ்பூன் கடலைப் பருப்பு

1/2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு

3 பச்சை மிளகாய்

10 முந்திரி பருப்பு

2 ஸ்பூன் நெய்

ஒரு சிட்டிகை பெருங்காயம்

கறிவேப்பிலை சிறிதளவு

கொத்தமல்லி சிறிதளவு

உப்பு தேவையான அளவு

செய்முறை:

ஒரு அகலமான பாத்திரத்தில் 1/2 கப் ரவாவை சேர்த்து வறுக்கவும். மொறுமொறுப்பாகவும் சிறிது நறுமணமாகவும் மாறும் வரை மிதமான தீயில் வறுக்கவும், பழுப்பு நிறமாகாமல் பார்த்துக் கொள்ளவும். - வெங்காயம் மற்றும் தக்காளியை தனியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கவும். நெய் உங்கள் தக்காளி உப்மாவிற்கு ஒரு சிறந்த நறுமணம் மற்றும் சுவையைக் கொடுக்கும். பின்னர் ½ கடுகு, ½ டீஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் கடலைப் பருப்பு, 1/2 ஸ்பூன் உளுந்தம் பருப்பு மற்றும் 10 முந்திரி அனைத்தையும் ஒரே நேரத்தில் சேர்த்து வறுக்கவும். பருப்பு வகைகள் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.இப்போது சிறிதளவு கறிவேப்பிலை, 3 நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.- பின்னர் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் வரை வதக்கவும். தக்காளி முற்றிலும் மென்மையாக மாறும் வரை மூடி வைத்து சமைக்கவும். தக்காளியின் சுவையை அதிகரிக்க அதிக தீயில் சில நிமிடங்கள் வதக்கவும். இதன் மூலம் தக்காளி மேலும் சுவையானதாக மாறும்.தக்காளி நன்கு கொதித்ததும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி உப்பு சரிபார்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.- நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும். கொதிக்கும் நீரில் ரவையை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டவும். ரவை கட்டியாக மாறாத படி தொடர்ந்து கிளறவும்.ரவையில் கட்டி ஏதும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்தியவுடன் ஒரு மூடி போட்டு பாத்திரத்தை மூடவும். தண்ணீர் நன்கு வற்றியதும் நன்கு கிளறிவிட்டு நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.சுவையான தக்காளி உப்புமா ரெடி, இதை சூடாக தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமான காலை உணவாக இருக்கும்.

 

Advertisement

Related News