தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டொமேட்டோ ஆம்லெட்

தேவையானவை:

கடலை மாவு - 1 கப்

தக்காளி - 2

வெங்காயம் - 1

இஞ்சி - 1 இன்ச்

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லி - சிறிது

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

கரம் மசாலா - 1 சிட்டிகை

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம், தக்காளி, இஞ்சி, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு பொடியாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.பின்பு அதில் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.ஆம்லெட் கலவையானது மிகவும் நீராக இல்லாமல், மிதமான நிலையில் இருக்க வேண்டும். இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடேற்ற வேண்டும்.பின் அதில் ஒரு கரண்டி ஆம்லெட் கலவையை ஊற்றி லேசாக பரப்பி விட வேண்டும். பின்பு அந்த ஆம்லெட்டை சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அடிப்பகுதி பொன்னிறமாகவும் மொறு மொறுப்பாகவும் ஆகும் போது தோசைக்கரண்டி பயன்படுத்தி திருப்பிப் போட வேண்டும். முன்னும் பின்னும் மொறு மொறுப்பானதும் எடுத்தால், சுவையான தக்காளி ஆம்லெட் தயார்.