தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சர்க்கரை வள்ளி கிழங்கு முட்டை குருமா

தேவையான பொருட்கள்

முட்டை - 6

சர்க்கரை வள்ளி கிழங்கு - 1/4 கிலோ

காய்ந்த மிளகாய் - 5

தனியா - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி

இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

காஷ்மீர் மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - ஒரு கொத்து

முந்திரி - 10

தக்காளி - 3

பட்டை - 1

தேங்காய் பால் - 1 கப்

இலவங்கம் - 5

பிரியாணி இலை - 2

ஏலக்காய் - 3

சோம்பு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 குழி கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

அடுப்பில் வாணலி வைத்து காய்ந்த மிளகாய், சீரகம், சோம்பு, தனியா ஆகியவற்றை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். ஆறியதும் நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை வள்ளி கிழங்கு தோல் சீவி சுத்தம் செய்து துருவி சேர்த்து, பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். தோசை கல்லில் ஊற்றி இரண்டு புறமும் வெந்ததும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். மீண்டும் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, இரண்டாக கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை கொர கொரவென்று அரைத்து சேர்த்து வதக்கவும். வதங்கும் நேரத்தில் மிக்ஸியில் தக்காளி, புதினா முந்திரி, கொத்தமல்லி கீரை ஆகியவற்றை சேர்த்து தேங்காய் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போல் சேர்த்து வதக்கி அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட்டை ஊற்றவும். பிறகு வறுத்து அரைத்த தையும் அப்படியே சேர்க்கவும். நன்கு வதங்கியதும் மீதம் இருக்கும் தேங்காய்ப் பால், காஷ்மீர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மட்டன் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மசாலா வாசனை போனதும் நறுக்கி வைத்த முட்டை துண்டுகளை சேர்த்து அனலை குறைத்து ஐந்து நிமிடம் கிளறவும். கொத்தமல்லி கீரை தூவி அடுப்பை அணைக்கவும் சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு முட்டை குருமா தயார்.