தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சர்க்கரைவள்ளி சீடை

தேவையானவை:

வேகவைத்து மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 3 கப்,

மைதா - 1 கப்,

பொட்டுக்கடலை மாவு - ½ கப்,

அரிசி மாவு - 2 கப்,

காரப் பொடி - தேவையான அளவு,

பெருங்காய தூள் - ¼ டீஸ்பூன்,

கேசரி பவுடர் - சிறிது,

பீட்ரூட் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,

உப்பு, எண்ணெய் - ேதவைக்கேற்ப.

செய்முறை:

மைதா மாவை ஆவியில் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். அதனுடன் அரிசி மாவு, பொட்டுக்கடலை, காரப்பொடி, உப்பு, பெருங்காயம், மசித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு பிசையவும். பிசைந்த மாவை 3 பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தை கையில் எண்ணெய் தொட்டு சிறு சிறு சீடைகளாக உருட்டி பிளாஸ்டிக் சீட்டில் போடவும். கேசரிப் பவுடரில் சிறிது பாலைச் சேர்த்து அந்த கலர் பாலினால் இன்னொரு பாகத்தை நன்குப் பிசைய கேசரி கலர் கிடைக்கும். அதையும் சிறு சிறு சீடைகளாகச் செய்து வேறொரு சீட்டில் போடவும். கடைசி பாகத்தில் பீட்ரூட் சாறை விட்டு பிசைந்தால் வெல்வெட் கலர் மாவு கிடைக்கும். அதையும் சிறு சிறு சீடைகளாக உருட்டி வேறொரு பேப்பரில் போடவும். வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்ததும் தனித் தனியாகப் போட்டு வறுத்து எடுக்கவும். எல்லா சீடைகளையும் வறுத்த பின் ஒன்றாகக் கலந்து விட்டால் ‘கலர்ஃபுல் சீடை’ கிடைத்துவிடும்.

Related News