முடக்கத்தான் கீரை ரசம்
முடக்கத்தான் கீரை - 2 கப்
புளி- தேவையான அளவு
தக்காளி -2
பூண்டு - 6
மிளகு, சீரகத்தூள் - தலா 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கடுகு , உளுத்தம் பருப்பு , சீரகம், கடலைப்பருப்பு - தாளிக்க
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 ஸ்பூன்
கருவேப்பிலை – சிறிது
செய்முறை:
புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். சுத்தம் செய்த முடக்கத்தான்கீரை இலைகளை முக்கால்வாசி எடுத்து தேவையான நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் நெய் விட்டுத் தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்த்து தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய தக்காளி, உப்பு தட்டிய பூண்டு சேர்த்து வதக்கி மீதமுள்ள இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தேவையான புளி கரைசல்விட்டு ஒரு கொதி வந்ததும் வடிகட்டி எடுத்து வைத்த கீரைசாறுடன் மிளகு சீரகத்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். முடக்கத்தான் கீரை கை கால், மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்தாகும்.