தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மசாலா சுண்டல்

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கப்

உருளைக்கிழங்கு - 2

தக்காளி - 1

பூண்டு - 3 பல்

இஞ்சி - ஒரு துண்டு

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

புளிச்சாறு - 2 ஸ்பூன்

இலவங்கப்பட்டை - 1 துண்டு

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

1 கப் பச்சை பட்டாணியை 5 முதல் 7 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும்.பச்சை பட்டாணி நன்கு ஊறியதும் உருளைக்கிழங்கை நறுக்கி இரண்டையும் குக்கரில் போட்டு போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வரை விட்டு வேகவைக்கவும்.பிரஷர் குக்கர் ஆறியவுடன் மூடியைத் திறந்து பாதி பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை தனியாக எடுத்துக்கொண்டு நன்றாக மசித்துக் கொள்ளவும். - ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒரு சிறிய இலவங்கப்பட்டை, வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். - இந்த கலவை நன்கு வதங்கியதும் தனியாக எடுத்து ஆறவைத்து மிக்சியில் பேஸ்ட் போல அரைக்கவும்.பின்னர் கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து வதக்கி பின் உப்பு, மிளகாய் தூள், மல்லித்தூள், புளிச்சாறு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து அரை கப் தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும். - 3 முதல் 5 நிமிடம் வரை இதை கொதிக்க விடவும், பின்னர் அதில் உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து 7 - 8 நிமிடங்கள் வேகவைக்கவும். - இப்போது தனியாக மசித்து வைத்த உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணியை இதில் சேர்த்து சில் நிமிடம் கொதிக்க விடவும். - நன்கு வெந்து வந்ததும் இதில் பச்சை வெங்காயம் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சாலையோர சுவையான மசாலா சுண்டல் ரெடி!