தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சிறுதானிய சமோஸா

தேவையான பொருட்கள்:

தினை - 1/4 கப்

கம்பு - 1/4 கப்

உருளைக்கிழங்கு - 1

சீரகம் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - சிறிதளவு

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

மேல் மாவு தயாரிக்க:

மைதா - 1 கப்

ரவை - 1/2 கப்

நெய் - 1/4 கப்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சிறிதளவு

செய்முறை:

பாத்திரத்தில் மைதாவை போட்டு ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையவும். சிறு உருண்டைகளாக்கி பூரிபோல் இட்டு தோசைக்கல்லில் லேசாகச் சுட்டெடுத்து இரண்டு அரைவட்டமாக கத்தரித்து வைக்கவும். தினை, கம்பு வறுத்து ரவையைப்போல் உடைத்து அத்துடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, சீரகம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சிறிது மசாலா பவுடர், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கவும். அரை வட்டமாக உள்ள பூரியின் நடுவே தினை மசாலாவை வைத்த மூன்று பக்கமும் தண்ணீர்தொட்டு ஓட்டி, முக்கோண வடிவம் செய்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காயவைத்து, மிதமான தீயில் இரண்டிரண்டாக பொரித் தெடுக்கவும். தக்காளி சாஸூடன் தொட்டு சாப்பிட சூப்பராக இருக்கும்.