தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சேமியா ரவா அல்வா

தேவையானவை:

ரவை - ஒரு கப்,

சேமியா - அரை கப்,

சர்க்கரை - இரண்டரை கப்,

நெய் - அரை கப்,

முந்திரி - 10,

ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்,

ஆரஞ்சு அல்லது சிவப்பு கலர் பொடி - ஒரு சிட்டிகை,

பால்கோவா - 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு ரவை, சேமியாவை தனித்தனியே வறுக்க வேண்டும். மீதியுள்ள நெய்யை காய வைத்து அதில் முந்திரியை போட்டு நிறம் மாறாமல் வறுத்து சேமியா, ரவையை சேர்க்க வேண்டும். பிறகு, 4 டம்ளர் தண்ணீரை நன்றாகக் கொதிக்க விட்டு, ரவை, சேமியா கலவையில் ஊற்றி, வேக விட வேண்டும். கலர் பொடி சேர்த்து வெந்ததும், சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைந்து எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும்போது இறக்கி ஏலக்காய்த்தூள், பால்கோவா கலந்து பரிமாற வேண்டும்.