தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீர்க்கங்காய் கிரேவி

Advertisement

தேவையான பொருட்கள் :

பீர்க்கங்காய் - 200 கிராம் (தோலுரித்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)

பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்

தயிர் - 1 கப்

எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பிரியாணி இலை - 1

தண்ணீர் - 1/2 கப்

உப்பு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

செய்முறை :

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் பச்சை மிளகாயை நறுக்கி போட்டு வதக்க வேண்டும். பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். பிறகு பீர்க்கங்காயை சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து பீர்க்கங்காயை வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து அடிப்பிடிக்காமல் இருக்க கிளறி விடுங்கள். பீர்க்கங்காய் நன்கு வெந்ததும், கெட்டி தயிரை சேர்த்து, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விட வேண்டும். பின் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, மீண்டும் 3-5 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். கிரேவி நன்கு கொதித்ததும், அதில் கசூரி மெத்தியை கையால் நசுக்கிப் போட்டு, அத்துடன் கொத்த மல்லியையும் தூவி நன்கு கிளறி இறக்கினால், சுவையான பீர்க்கங்காய் கிரேவி தயார்.

Advertisement

Related News