பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி
தேவையான பொருட்கள்
1/2கிலோசிக்கன்
தேவையான அளவுசமையல் எண்ணெய்
1/2டீஸ்பூன்மஞ்சள் தூள்
2டீஸ்பூன்செஜ்வான் சட்னி(மிளகாயை ஊரவைத்து அரைத்த பேஸ்ட்)
தேவையான அளவுஉப்பு தூள்
3டேபிள் ஸ்பூன்தயிர்
தேவையான அளவுதண்ணீர்
தேவையான அளவுகொத்துமல்லி தழைகள்
முழு மசாலா பவுடர் செய்ய தேவையான பொருட்கள்:
1துண்டுபட்டை
6கிராம்பு
5ஏலக்காய்
1டீஸ்பூன்சீரகம்
1டீஸ்பூன்சோம்பு/பெருஞ்சீரகம்
3டீஸ்பூன்கொத்துமல்லி விதைகள்
10காஷ்மீர் காய்ந்த சிவப்பு மிளகாய்-(5மிளகாய் விதை நீக்கியது)
விழுதுகள் அரைக்க தேவையான பொருட்கள்:
3வெங்காயம்
15பற்கள்பூண்டு
1துண்டுஇஞ்சி இன்ச்
தக்காளி பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:
5தக்காளி பழம்
தேவையான அளவுதண்ணீர்-(தக்காளியை வேக வைப்பதற்கு)
தேங்காய் விழுது அரைக்க தேவையான பொருட்கள்:
1மூடிதேங்காய்
தேவையான அளவுதண்ணீர்
தேவையான அளவு எண்ணெய் தேங்காயை லேசாக வறுக்க
செய்முறை:
பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி செய்வதற்க்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் தயார் செய்துக் கொள்ளவும்.1/2கிலோ சிக்கன் துண்டுகள். 6கிராம்பு,5ஏலக்காய்,1சிறிய துண்டு பட்டை,1டீஸ்பூன் சீரகம்,1டீஸ்பூன் சோம்பு/பெருஞ்சீரகம்,3டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்.மேலே குறிப்பிட்ட முழு மசாலா பொருட்களை ஒரு பாதத்திரத்தில் போடவும்.முழு மசாலா பொருட்களை எண்ணெய் இல்லாமல் பாத்திரத்தில் போட்டு 2நிமிடம் வறுக்கவும்.10காஸ்மீர் காய்ந்த சிவப்பு மிளகாயில் 5மிளகாயில் உள்ள விதைகளை நீக்க வேண்டும்.எண்ணெய் இல்லாமல் பாத்திரத்தில் போட்டு காய்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய்களை லேசாக வறுக்க வேண்டும்.வறுத்த முழு மசாலா பொருட்கள் மற்றும் காய்ந்த காஷ்மீர் சிவப்பு மிளகாய் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் செய்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 5டேபிள் ஸ்பூன்(தேவையான அளவு)எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு அரைத்து வைத்த மசாலா பவுடரை போட்டு கிளரவும்.சிறிதளவு சூடு ஏறிய பிறகு 1/2கிலோ சிக்கன் துண்டுகளை போட்டு 3நிமிடம் நன்றாக வதக்கவும்.அடுத்து 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,2டீஸ்பூன் மிளகாய் விழுது சேர்க்கவும்(மிளகாய்களை ஊரவைத்து அரைத்த செஜ்வான் சட்னி விழுது)...அடுத்து 3வெங்காயம் நீளமாக வெட்டிக் கொள்ளவும்,15பற்கள் பூண்டு,2இன்ச் இஞ்சி 1துண்டு.ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.எண்ணெய் சூடான பிறகு 15பற்கள் பூண்டு,2இன்ச் நறுக்கிய இஞ்சி துண்டுகளை போடவும்.அடுத்து நறுக்கி வைத்த 3வெங்காயத்தை போட்டு லேசான பொன் நிறமாகும் வரை வதக்கவும்.வதக்கிய பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்று அரைக்கவும்.
அரைத்த வெங்காயம்,இஞ்சி,பூண்டு பேஸ்ட்டை சிக்கனில் சேர்த்து கிளரி 5-7நிமிடம் நன்றாக வதக்கவும்.ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5தக்காளி பழத்தை 5-7நிமிடம் தக்காளி வேகும் வரை கொதிக்கவிடவும்.சூடு ஆறிய பின் தோல் நீக்கி கட் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.. அடுத்து தக்காளி பேஸ்ட்டை சிக்கனில் சேர்த்து நன்றாக வதக்கி மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.குறைந்த தீயில் சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்.
3டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கிளரவும்.அடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.1மூடி நறுக்கிய தேங்காயை பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி.எண்ணெய் சூடான பிறகு நறுக்கிய தேங்காய் துண்டுகளை போட்டு லேசாக வறுக்கவும்.அடுத்து வறுத்து வைத்த தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைக்கவும்.அடுத்து தேங்காய் விழுதுகளை சிக்கன் கலவையில் சேர்க்கவும்.அடுத்து சிக்கன் கலவையில் தேங்காய் விழுதுகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.கொத்துமல்லித்தழைகள் தூவவும். அடுத்து குறைந்த தீயில் மூடி வைத்து வேக வைக்கவும்.பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி தயார்