தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பால் கடம்பு

தேவையான பொருட்கள்:

பால் - ½ லிட்டர்

ஏலக்காய் - 2 அல்லது ½ டீ ஸ்பூன்

சர்க்கரை - 100 கிராம்

பால் பவுடர் - 100 கிராம்

சீனா க்ராஸ் எனப்படும் அகர் அகர் - 7 கிராம்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முடிந்த வரை தண்ணீர் சேர்க்காத கெட்டியான பால் எடுத்து கொள்ளவும்.பாக்கெட் பால் என்றால் ஃபுல் கிரீம் மில்க் வாங்கி பயன்படுத்தலாம் அல்லது கிடைக்கவில்லை என்றால் சாதாரண பால் வாங்கி உபயோகித்து கொள்ளுங்கள்.கிடைப்பதை வைத்து முயற்சி செய்வதில் ஏதும் தவறில்லை, பாலின் தன்மையை பொறுத்து சுவையில் சிறிதாய் மாற்றம் இருக்கலாம். பாலை அடுப்பில் வைத்து முழு வேக தீயில் நன்றாக கொதிக்க விடவும். பால் நன்றாக கொதித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும். அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும். பின் இரண்டு ஏலக்காயை சர்க்கரையுடன் சேர்த்து நன்றாக பொடி செய்து பாலுடன் சேர்த்து கொள்ளவும். அதில் பால் பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைய விடவும். நன்றாக கரைந்ததும் அதனுடன் சீனா க்ராஸ் எனப்படும் அகர் அகரை பொடியாக நறுக்கியோ அல்லது உடைத்தோ சேர்த்து கரைய விடவும். அகர் அகர் மேற்பரப்பில் கரைந்தது போல இருந்தாலும் அடிப்பகுதியில் கட்டியாக இருக்கும், நன்றாக கரைத்ததை உறுதி செய்து கொள்ளவும். பால் பொங்கி வரும் தன்மை கொண்டிருப்பதால், நன்றாக கரண்டி வைத்து கலந்து கொண்டே இருக்கவும்.பால் கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வரும் வரை நன்றாக கலந்து சரியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். ஒரு தட்டு அல்லது அகலமான பாத்திரத்தில் நெய்யை தடவி கொள்ளவும். காய்ச்சி வைத்த பாலை நெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றவும். குறைந்து 4-5 மணி நேரம் ஆற வைக்க வேண்டும். நன்றாக ஆறியதும் விளிம்புகளில் கத்தியால் கீறி பாத்திரத்தை தலை கீழாக கவிழ்த்து தட்டினால் அப்படியே வேறு பாத்திரத்திற்கு மாறிவிடும். துண்டுகளாக நறுக்கினால் அருமையான ரோட்டுக்கடை சீம்பால் ரெடி.இதை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு ஆன அப்புறமும் சாப்பிடலாம்!