தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆட்டுக்கறி காரப் போளி

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத ஆட்டுக்கறி - 1/4 கிலோ

சின்ன வெங்காயம் - 100 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

தனியா தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மைதா - 1/2 கிலோ

கறிவேப்பிலை, கொத்தமல்லி - 1 கொத்து

எண்ணெய் - 1 குழி கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஆட்டுக்கறியை கழுவி சுத்தம் செய்து மஞ்சள்தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். வடித்த தண்ணீரை மைதா மாவில் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவை விட இலகுவாக பிசையவும். பிசைந்ததும் அதன் மீது எண்ணெய் தடவி மூடி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, அரைத்த சின்ன வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்த ஆட்டுக்கறி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு மற்றும் கறிவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். பிசைந்து வைத்த மைதா மாவை உருண்டையாக உருட்டி அதில், வதக்கிய மட்டன் மசாலாவை நடுவில் வைத்து போளி வடிவத்திற்கு தேய்த்து தோசை கல்லில் இருபுறமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான ஆட்டுக்கறி காரப் போளி தயார்.

Related News