தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாம்பழ போளி

தேவையான பொருட்கள்:

வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 5-6

ஏலக்காய் - 2

தேங்காய் - 1/2 மூடி

நன்கு கனிந்த மாம்பழம் - 1 (தோல் நீக்கியது)

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

நாட்டுச்சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

மாவிற்கு...

கோதுமை மாவு - 1 1/2 கப்

உப்பு - சிறிது

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலை, முந்திரி, ஏலக்காய் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் தேங்காயை மிக்சர் ஜாரில் போட்டு, அதையும் நன்கு அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதே மிக்சர் ஜாரில் நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அரைத்த தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போக நன்கு வதக்க வேண்டும்.பின் அதில் நாட்டுச்சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி, அரைத்த மாம்பழத்தை சேர்த்து நன்கு நிறம் மாறும் வரை கிளறி விட வேண்டும்.அடுத்து அதில் பொடித்து வைத்துள்ள வேர்க்கடலையை பொடியை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.அதன் பின் ஒரு பௌலில் கோதுமை மாவு, சிறிது உப்பு சேர்த்து கிளறி, கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி பதத்தை விட சற்று தளர்வாக பிசைந்து, எண்ணெய் தடவி ஒரு 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.பிறகு தயாரித்து வைத்துள்ள மாம்பழ கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.அதன் பின் பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவையும் மாம்பழ உருண்டைகளுக்கு இணையாக சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு வாழை இலை அல்லது பால் கவரை எடுத்து, அதில் நெய் தடவி, பின் ஒரு கோதுமை மாவு உருண்டையை எடுத்து நடுவில் வைத்து சற்று தட்டையாக தட்டி, அதன் நடுவே மாம்பழ உருண்டையை வைத்து, முனைப்பகுதிகளை அப்படியே மூடி விட வேண்டும்.பின் அதை அப்படியே தட்டையாக போளி போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள போளியை சேர்த்து, எண்ணெய் ஊற்றி முன்னும், பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான மாம்பழ போளி தயார்.

 

Related News