தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மலாய் கோஃப்தா

தேவையானவை :

உருளைக்கிழங்கு - 1 கப் (வேகவைத்து மசித்தது)

மசித்த பனீர் - 1 கப்

மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன் (பொடித்தது)

சீரகம் - 1 /2 டீஸ்பூன்'

உப்பு - 1 /4 டீஸ்பூன்'

பச்சைமிளகாய் - 1 சிறியது (பொடித்தது)

எண்ணெய் - பொரிக்க

மாவு தயாரிக்க தேவையானவை :

மைதா - 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்

கிரேவி செய்வதற்கு தேவையானவை :

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - சிறிது

சீரகம் - 1 டீஸ்பூன்'

தக்காளி - 2 நடுத்தரமானது

மிளகாய்த்தூள் - 1 /4 டீஸ்பூன்'

மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 /4 டீஸ்பூன்'

மைதா - 1 டீஸ்பூன்'

கிரீம் - 1 /4 கப்

இஞ்சி துருவியது - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

மஞ்சள்தூள் - 1 /2 டீஸ்பூன்'

உப்பு - 1 /2 டீஸ்பூன்'

மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை :

கொடுத்துள்ள பொருட்களை நன்றாக கலந்து கொள்ளவும்.கையில் சிறிது எண்ணெய் தடவி கலந்ததை 16 பாகங்களாகப் பிரித்து உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.மைதா மாவை நான்கு டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்துக் கொள்ளவும்.வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளவும்.எண்ணெய் சூடானதும் பனீர் உருண்டைகளை ஒவொன்றாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

கிரேவி செய்முறை

முதலில் மிக்ஸ்சியில் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மாவு,கிரீம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தனியே வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பெருங்காயம், சீரகம் சேர்க்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது, மல்லித்தூள், மஞ்சள், மிளகாய்த்தூள் சேர்த்து நான்கு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.தக்காளி விழுதை எண்ணெய் பிரிந்து பாதியாகும் வரை வதக்கவும்.மிதமான தீயில் கிரீம் மற்றும் மாவு கலவை, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 8 நிமிடங்கள் வரை வதக்கவும்.பின் கரம் மசாலா, மல்லிதழை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களைச் சேர்த்து கொதிக்க ஆரம்பிக்கும்போது அடுப்பில் இருந்து இறக்கவும்.