தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மதுரை மட்டன் கறி தோசை

தேவையான பொருட்கள்:

மட்டன் கறி மசாலாவிற்கு

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - 1 கொத்து

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

கல் உப்பு - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

சீரகத் தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகுத் தூள் - சிறிது

மட்டன் கொத்துக்கறி - 1/2 கிலோ

தண்ணீர் - சிறிது

கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிது

தோசைக்கு

முட்டை - 2

தோசை மாவு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.* அதன்பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.பின்பு மட்டன் கொத்துக்கறியை கழுவி சேர்த்து, 5 நிமிடம் வதக்க வேண்டும்.பிறகு அதில் சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து மட்டனை 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், கொத்துக்கறி மசாலா தயார்.பின் ஒரு பௌலில் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு கரண்டி தோசை மாவை ஊற்றி, ஊத்தாப்பம் போன்று தடிமனாக ஊற்றி, அதன் மேல் சிறிது முட்டையை ஊற்றி, பின் கறி மசாலாவை பரப்பி, எண்ணெய் ஊற்றி, தோசைக்கரண்டியால் மசாலாவை அழுத்திவிட்டு, பின் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சுவையான மதுரை ஸ்பெஷல் கறி மசாலா தோசை தயார்.

 

Related News