தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்:
Advertisement

சேனைக்கிழங்கு - 250 கிராம்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

மசாலாவிற்கு

கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பட்டை - 2 இன்ச்

கிராம்பு - 2

பூண்டு - 6 பல்

இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)

வரமிளகாய் - 5

சோம்பு - 1 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

துருவிய தேங்காய் - 1/2 கப்

கசகசா - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 1 கப்

தாளிப்பதற்கு

கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் சேனைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, நன்கு கழுவி, சிறு சிறு நீளத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் சேனைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 5-7 நிமிடம் கிழங்கை வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும்,சேனைக்கிழங்கைப் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து ப்ரை செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.* அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, பூண்டு, இஞ்சி, வரமிளகாய், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.பின் அதில் துருவிய தேங்காய், கசகசா, மல்லித் தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.அடுத்து அதை மிக்சர் ஜாரில் போட்டு, 1 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் அரைத்த மசாலா மற்றும் சேனைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் வைத்து, மசாலா நன்கு சேனைக்கிழங்குடன் சேரும் வரை வதக்கி இறக்கினால், சுவையான கொங்குநாடு ஸ்டைல் சேனைக்கிழங்கு மசாலா தயார்.

Advertisement

Related News