தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கேழ்வரகு அடை தோசை

தேவையான பொருட்கள்

கேழ்வரகு முழு தானியம் - 2 கப்

கொள்ளு - 2 மேஜைக்கரண்டி

முழுப் பயறு - 2 மேஜைக்கரண்டி

பச்சரிசி - 1 கப்

முழு உளுந்து - ½ கப்

கடலைப் பருப்பு - ¼ கப்

வெந்தயம் - 1 தேக்கரண்டி

1 தேக்கரண்டி ஈஸ்ட்

ஸ்பினாச் கீரை - 2 கப்

வெங்காயம் - 1 கப்

இஞ்சி - 1 அங்குலம்

பூண்டு - 4 பல்

சிவப்பு மிளகாய் - 6

பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1 மேஜைக்கரண்டி

நல்லெண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை

பெரிய பாத்திரத்தில் 6 கப் நீர் சேர்த்து உளுந்து, வெந்தயம், கடலைப் பருப்பு, பயறு, கொள்ளு, அரிசி ஆகியவற்றை 6 மணி நேரம் ஊறவைக்கவும். இதோடு வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாய் சேர்த்து சிறிது கொரகொரவென்று அரைக்கவும். முழு கேழ்வரகு உபயோகித்தால் தனியாக ஊற வைத்து அரைக்க வேண்டும். பின் இரண்டு மாவுகளையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். தோசை மாவை பெரிய பாத்திரத்தில் போட்டு ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க வேண்டும். மாவு 4 லிருந்து 5 மணி நேரத்தில் பொங்கி வந்த பிறகு தேவையான உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் கீரை, சீரகம், பெருங்காயம் சேர்த்து கிளறவும். தற்போது மாவு அடை செய்ய தயார். தோசைக்கல்லை மிதமான நெருப்பின் மேல் வைத்து சூடான பின், எண்ணெய் தடவி அதன்மீது தயார் செய்து வைத்துள்ள மாவை எடுத்து ஊற்றி அடை தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றுக. இரண்டு பக்கமும் பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான கேழ்வரகு அடைதோசை தயார்.