தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இட்லி மாவு கார போண்டா

தேவையான பொருட்கள்:

புளித்த இட்லி மாவு - 1 கப்

ரவை - 2 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு -1 டேபிள் ஸ்பூன்

வரமிளகாய் - 3 (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)

பூண்டு - 3 பல்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை -1 கொத்து (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

சீரகம் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின் அதில் அரிசி மாவு மற்றும் ரவையை சேர்த்து நன்கு கலந்து, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.அதேப் போல் வரமிளகாயை சுடுநீரில் போட்டு, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.10 நிமிடம் கழித்து, வரமிளகாயை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் பூண்டு பற்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஊற வைத்த மாவுடன், அரைத்த வரமிளகாய் விழுதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கைகளால் கலந்து கொள்ள வேண்டும்.இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை, கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான இட்லி மாவு கார போண்டா தயார்.