தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

செம்பருத்தி பூ சட்னி

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூ - 15-20

தேங்காய் - ½ மூடி

எலுமிச்சை பழம் - ½ மூடி

பூண்டு - 5 பல்

வரமிளகாய் - 5

இஞ்சி - 1 இன்ச் துண்டு

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் - சிறிதளவு

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ¼ டீ ஸ்பூன்

கடலைப்பருப்பு - ½ டீ ஸ்பூன்

உளுந்தம்பருப்பு - ½ டீ ஸ்பூன்

கருவேப்பிலை - சிறிதளவு

பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை:

செம்பருத்தி பூவின் அடிப்பகுதியில் இருக்கும் காம்பை நீக்கி இதழ்களை தனியாக பிரித்து வைக்கவும்.பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெதுவெதுப்பாக சூடு செய்வும்.பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது கல் உப்பு சேர்த்து செம்பருத்தி இதழ்களை நன்றாக கழுவவும்.இது பூவில் இருக்கும் சிறு பூச்சிகள் அல்லது எறும்புகளை நீக்கும்.மீண்டும் ஒரு முறை சுத்தமான தண்ணீரால் அலசவும்.பின் செம்பருத்தி இதழ்களை தண்ணீர் இல்லாமல் உலர வைக்கவும்.பூண்டின் தோலை நீக்கி வைத்து கொள்ளவும்.தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைக்கவும்.எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி வைக்கவும்.இஞ்சி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.பின் ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்து வைத்த செம்பருத்தி பூ இதழ்கள், பூண்டு, இஞ்சி, மற்றும் காம்பு நீக்கிய வரமிளகாயை சேர்க்கவும்.பின் அதனுடன் கருவேப்பிலை, துருவிய தேங்காய், மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.கடைசியாக அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.இப்போது வாணலியை அடுப்பில் வைத்து சூடானது எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.பின் அதில் பச்சை கருவேப்பிலை சேர்க்கவும்.அதனுடன் உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.கடைசியாக பெருங்காயம் சேர்த்து, சட்டினி உடன் சேர்த்தால் சுவையான செம்பருத்தி பூ சட்னி ரெடி!

 

Related News