குல்கந்து ஜாமூன்
தேவையானவை:
Advertisement
பிரட்,
குல்கந்து,
குங்குமப்பூ,
சர்க்கரை,
ஏலக்காய் பொடி,
எலுமிச்சை சாறு,
நெய்,
எண்ணெய்.
செய்முறை:
சூடான வாணலியில் தண்ணீர் ஊற்றி அதனுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்கவிடவும், பிறகு அதில் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்து பாகு பதம் வந்ததும் இறக்கி தனியாக வைத்துவிட்டு அதில் ஒரு துளி எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். பின்னர், பிரட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு அதனுடன் பால் சேர்த்து மென்மையான மாவு பதத்திற்கு பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவும். இந்த உருண்டைகளுக்குள் சிறிதளவு குல்கந்து வைத்து மீண்டும் உருட்டிக்கொள்ளவும். சூடான எண்ணெய் அல்லது நெய்யில் குல்கந்து உருண்டைகளை பொன்னிறமாக பொரிக்கவும். பின்னர், உருண்டைகளை சர்க்கரைப் பாகில் சேர்த்து, அரை மணி நேரம் நன்கு ஊற வைக்கவும். குல்கந்து ஜாமூன் தயார்.
Advertisement