தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வெண்ணெய் கச்சாயம்

தேவையானவை:

வெண்ணெய் - 1 கப்,

பச்சரிசி - 3 கப்,

சர்க்கரை - 2 கப்,

எண்ணெய் - பொரிப்பதற்கு,

ஏலப்பொடி - 1 டீஸ்பூன்.

செய்முறை:

பச்சரிசியை 20 நிமிடம் ஊறவைத்து, தண்ணீர் வடித்து, நிழலில் உலர்த்தவும். பாதியளவு உலர்ந்ததும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துச் சலிக்கவும். ஈரம் உலராமல் இருக்க, மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அழுத்திவைக்கவும்.வெண்ணெயை லேசாகப் பிசைந்து, அதனுடன் ஈர மாவைச் சேர்த்துப் பிசையவும். உருட்டும் பதம் வந்ததும் (தேவைப்பட்டால் மட்டும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்) ஒரு டபராவைக் கவிழ்த்துப் போட்டு மேலே ஒரு சிறிய ஈரத் துணியை விரிக்கவும். அதன் மேல் மாவை வடைபோல் தட்டி, சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். பொடித்த சர்க்கரையில் பொரித்த கச்சாயத்தைப் புரட்டி எடுக்கவும். இது எளிதில் செய்துவிடக்கூடியது. இதைச் செய்வதற்கு எந்தப் பதமும் கிடையாது, பாகு காய்ச்சும் வேலையும் இல்லை.