தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பீட்ரூட் கோலா உருண்டை குழம்பு

தேவையான பொருட்கள்

2பீட்ரூட்

2 வெங்காயம்

2 தக்காளி

2பச்சை மிளகாய்

பட்டை கிராம்பு தாளிக்க

50 கிராம் பொட்டுக்கடலை

கருவேப்பிலை தேவையான அளவு

கொத்தமல்லி தேவையான அளவு

தேங்காய் ஒரு மூடி

உப்பு தேவைக்கேற்ப

2 ஸ்பூன் மல்லி தூள்

2 ஸ்பூன் கரம் மசாலா

2 ஸ்பூன் மிளகாய்த்தூள்

புதினா தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தட்டி வைத்துக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு லவங்கம் போட்டு தாளிக்க வைத்து பின்பு கருவேப்பிலை புதினா போட்டு நன்கு கிளறவும்.பின்பு அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு வதக்கிய பிறகு மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து ரெண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி தேங்காய் ஒரு மூடி அரைத்து வைத்துக் கொள்ளவும்.பீட்ரூட்டை தோல் நீக்கி நன்கு துருவி வைத்துக் கொள்ளவும்.பீட்ரூட் கோலா உருண்டை செய்வதற்கு மிக்ஸியில் பொட்டுக்கடலை துருவிய தேங்காய் மிளகாய் தூள் மல்லித் தூள் இஞ்சி பூண்டு தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.அதனுடன் கீறி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் உருட்டி வைத்துக் கொள்ளவும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயை காய வைத்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் உள்ள குழம்பு நன்கு கொதித்த பின் ஸ்பைசி யான கோலா உருண்டை அதனில் போட்டு அடுப்பை அணைக்கவும். பின் அதை சூடான சாதத்தில் பரிமாறவும்.