தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பனங்கிழங்கு புட்டு

தேவையான பொருட்கள்:

பனங்கிழங்கு - 5

பூண்டு - 3 பல்

ப.மிளகாய் - காரத்திற்கேற்ப

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு - சுவைக்கு

தாளிக்க:

கறிவேப்பிலை, எண்ணெய்- அரை டீஸ்பூன்

செய்முறை:

ப.மிளகாய், பூண்டு, சீரகத்தை கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.பனங்கிழங்கு தோல் நீக்கி வேகவைத்து கொள்ளவும். கிழங்கு வெந்ததும் நாரை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய பனங்கிழங்கு துண்டுகளை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். தண்ணீர் சேர்க்கக்கூடாது. உதிரி உதிரியாக வரும்படி பொடித்துக்கொள்ளவும். (கிராமப்புறங்களில் பனங்கிழங்கை வேக வைத்து பின்னர் காய வைத்து செய்வார்கள்)கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அரைத்து வைத்த ப.மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.பச்சை வாசனை போனவுடன் அதில் உதிரியாக பொடித்து வைத்த பனங்கிழங்கை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கிளற வேண்டும். உதிரி உதிரியாக வரும் போது இறக்கி பரிமாறவும்.