தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி

தேவையான பொருட்கள்:

தக்காளி - 2 பெரியது அல்லது 4 சிறியது

வரமிளகாய் - 3 -4(காரத்திற்கு ஏற்ப கூட்டி குறைத்து கொள்ளவும்)

வெள்ளை எள்ளு - 2 டீ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - ¾ டேபிள் ஸ்பூன்

சீரகம் - ½ டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - ¼ டீ ஸ்பூன்

இஞ்சி - ஒரு இன்ச் துண்டு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ¼ டீ ஸ்பூன்

கருவேப்பிலை - 1 கொத்து

வரமிளகாய் - 1

சீரகம் - ¼ டீ ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்

பெருங்காயம் - ¼ டீ ஸ்பூன்

பூண்டு - 10-12 பல்

செய்முறை

நன்றாக பழுத்த தக்காளியை தண்ணீரில் கழுவி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.இஞ்சியை சுத்தமாக கழுவி தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எண்ணெய் சேர்க்கவும்.அதனுடன் வரமிளகாய், உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.அதில் எள்ளு மற்றும் சீரகம் சேர்த்து மிதமாக வறுத்து ஆற வைக்கவும்.அதே வாணலியில் தக்காளி, இஞ்சி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.தக்காளி நன்றாக மசியும் வரை வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.மிக்ஸி ஜாரை எடுத்து அதில் வதக்கி வாய்த்த வரமிளகாய், உளுந்தம் பரப்பு, எள்ளு, மற்றும் சீரகம் சேர்த்து அரைக்கவும்.அதனுடன் வதக்கி ஆற வைத்த தக்காளி சேர்த்து அரைக்கவும்.தேவைப்பட்டால் சுவைக்கேற்ப உப்பு மற்றும் காரம் சேர்த்து கொள்ளவும்.அதே வாணலியை அடுப்பில் வைத்து தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.அதனுடன் கருவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.அதனுடன் பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.இதில் அரைத்து வைத்த தக்காளி சேர்த்து கிளறினால் சுவையாக ஆந்திரா ஸ்டைல் தக்காளி பச்சடி தயார்!