பயிர் விளைகின்ற நிலத்தை உழுது பண்படுத்துவதுபோல மக்கள் தம் வாழ்க்கையினை நெறிப்படுத்துவதே பண்பாடாகும். தமிழர் பண்பாடும் அத்தகையதே. அதாவது “அறம், பொருள், இன்பம், வீடு” என்கின்ற விடயங்களை பின்பற்றி வாழ்வதே வாழ்க்கை பண்பாடாகும். வழி வாழுதல் தமிழர் பண்பாடாகும். “அழுக்காறு அவா வெகுழி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என தமிழ் பண்பாடு அறம் சார்ந்தது என்று வள்ளுவர் உலகுக்கே எடுத்து காட்டுகிறார். வீட்டுக்கு வந்தோரை வருக வருக என்றழைத்து, இன்முகம் காட்டி வரவேற்று, உண்ண உணவழித்து, உபசரித்து, வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்து பார்ப்பது தமிழர்களின் தனித்துவமான பண்பாடுகளாகும். இவ்வாறு வந்தாரை வரவேற்று மகிழ்விக்கும் செய்திகள் வரலாற்றில் “பாரிமன்னன், அதியமான் நெடுமானஞ்சி, சடையப்பவள்ளல்” என்று வரலாறு தமிழர்களின் பண்பாட்டை எடுத்தியம்புகின்றன. இன்சொல் பேசுதல், பெண்களை மதித்தல், மூத்தோரை கனம் பண்ணல், பெற்றோரை மதித்தல், கற்றோரை வியந்து பார்த்தல், உயிர்களிடத்தில் அன்பு கொள்ளல், செய்நன்றி மறவாமை, காதல், நட்பு, கல்வி, போர், வீரம் என்று என்றைக்கும் மங்காத தனி பெருமை கொண்டது தமிழர் பண்பாடு என்றால் அது மிகையல்ல.