தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழர் பண்பாடு

பயிர் விளைகின்ற நிலத்தை உழுது பண்படுத்துவதுபோல மக்கள் தம் வாழ்க்கையினை நெறிப்படுத்துவதே பண்பாடாகும். தமிழர் பண்பாடும் அத்தகையதே. அதாவது “அறம், பொருள், இன்பம், வீடு” என்கின்ற விடயங்களை பின்பற்றி வாழ்வதே வாழ்க்கை பண்பாடாகும். வழி வாழுதல் தமிழர் பண்பாடாகும். “அழுக்காறு அவா வெகுழி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்” என தமிழ் பண்பாடு அறம் சார்ந்தது என்று வள்ளுவர் உலகுக்கே எடுத்து காட்டுகிறார். வீட்டுக்கு வந்தோரை வருக வருக என்றழைத்து, இன்முகம் காட்டி வரவேற்று, உண்ண உணவழித்து, உபசரித்து, வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்து பார்ப்பது தமிழர்களின் தனித்துவமான பண்பாடுகளாகும். இவ்வாறு வந்தாரை வரவேற்று மகிழ்விக்கும் செய்திகள் வரலாற்றில் “பாரிமன்னன், அதியமான் நெடுமானஞ்சி, சடையப்பவள்ளல்” என்று வரலாறு தமிழர்களின் பண்பாட்டை எடுத்தியம்புகின்றன. இன்சொல் பேசுதல், பெண்களை மதித்தல், மூத்தோரை கனம் பண்ணல், பெற்றோரை மதித்தல், கற்றோரை வியந்து பார்த்தல், உயிர்களிடத்தில் அன்பு கொள்ளல், செய்நன்றி மறவாமை, காதல், நட்பு, கல்வி, போர், வீரம் என்று என்றைக்கும் மங்காத தனி பெருமை கொண்டது தமிழர் பண்பாடு என்றால் அது மிகையல்ல.
Advertisement

Advertisement