தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விபத்தில் இறந்த கப்பல் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1.62 கோடி நஷ்ட ஈடு

கடலூர், ஏப். 25: விபத்தில் இறந்த கப்பல் ஊழியர் குடும்பத்திற்கு ரூ.1.62 கோடி நஷ்ட ஈடு வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் முதுநகரை சேர்ந்தவர் விமல். கப்பலில் சீமேன் ஊழியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி கடலூர் முதுநகர் ஆஞ்சநேயர் கோவில் அருகே பைக்கில் விமல், தனது சகோதரி பேராசிரியை தென்றல், இவரது குழந்தை நவீலன்(2) ஆகியோருடன் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே விமல் உயிரிழந்தார். மேலும் குழந்தை நவீலனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், இடது கால் முட்டிக்கு மேல் அகற்றப்பட்டது. இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது.

இறந்த கப்பல் ஊழியர் விமல் குடும்பத்தினர், காயமடைந்த குழந்தை நவீலன் குடும்பத்தினர், கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் நஷ்ட ஈடு வழக்கு சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 1ல் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில் இறந்த விமல் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியே 62 லட்சத்து 48 ஆயிரம் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடனும், குழந்தை நவீலனுக்கு ரூ.26 லட்சத்து 78 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார். இந்நிலையில் விமல் பைக் மீது மோதிய லாரி அவ்வழியாக வந்த மற்றொரு ஆட்டோ மீதும் மோதியதில் புதுச்சத்திரம் வில்லியநல்லூரை சேர்ந்த அசோக் குமார் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அசோக்குமாருக்கு ரூ.42 லட்சத்து 1,500 மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் நஷ்ட ஈடு வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

 

Related News