தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஐடிபில் பெட்ரோலிய நிறுவனம் விவசாய நிலத்தின் வழியே கேஸ் பைப் லைன் பதிக்கும் பணியை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை : கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தற்பொழுது ஐடிபில் பெட்ரோலிய நிறுவனம் விவசாய நிலத்தின் வழியே மீண்டும் கேஸ் பைப் பதிக்கின்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது. விவசாயிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1999ம் ஆண்டு சிசிகே பெட்ரோலிய நிறுவனம் விவசாயிகளிடம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து கொச்சின் முதல் கரூர் வரை பைப் லைன் அமைத்தது. ஆனால் திட்டம் நிறைவேறியதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தற்பொழுது எரிவாயு குழாய் பதிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு முழுவதுமாக சரிந்துவிட்டது. மேலும் வேளாண்மையும் பொய்த்துவிட்டது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை கொண்டு வருவது நல்லதுதான். ஆனால் அவை மக்களை பாதிக்காதவாறு அமைய வேண்டும். தற்பொழுது ஐடிபில் பெட்ரோலிய நிறுவனம் இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை சுமார் 360 கிலோ மீட்டர் தூரத்தில், இருகூர் முதல் முத்தூர் வரை உள்ள 70 கிலோ மீட்டர் தூரம் மட்டும் விவசாய நிலங்களில் வழியாக பைப் லைன் அமைக்க முயற்சியை எடுக்கின்றன.

இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், விவசாய பாதுகாப்பு இயக்கமும் தொடர்ந்து போராடி வருகிறது. எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் இத்திட்டதை ஐடிபில் நிறுவனம் கைவிட்டு மாற்றுவழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related News