தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவி

புழல்: புழல் அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை சம்மட்டியால் தாக்கிய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம், காட்டுநாயக்கன் நகர், காந்தி தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(39). ஆட்டோ டிரைவரான இவருக்கு, சரஸ்வதி(35) என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். சரஸ்வதி, செங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வருகிறார்.

கருணாகரன், அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகன், மகளுடன் போதையில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த கருணாகரன், மனைவி மற்றும் மகன், மகளுடன் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி சரஸ்வதி, வீட்டிலிருந்த சம்மட்டியை எடுத்து கணவர் தலையில் சரமரியாக தாக்கினார்.

அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த சோழவரம் போலீசார், தலையில் பலத்த காயமடைந்த ஆட்டோ டிரைவர் கருணாகரனை 108 ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவனை தாக்கிய மனைவி சரஸ்வதியை சோழவரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவி சம்மட்டியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related News