தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவை ரயில் நிலையத்தில் தவறவிட்ட 50 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த ஆர்பிஎப் போலீஸ்

கோவை: கோவை சுந்தராபுரம் சாரதா மில் ரோடு முத்தையா நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (53). இவர் மனைவி, மகளுடன் சென்னை சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு கோவைக்கு ரயிலில் திரும்பினர். ரயில் கோவை 1வது பிளாட்பாரத்தில் வந்து நின்றதும் ரவிக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உடமைகளை இறக்கி பிளாட்பாரத்தில் வைத்தனர். அதில் ஒரு கைப்பையை மட்டும் எடுக்கமறந்து காரில் புறப்பட்டு சென்றனர்.

Advertisement

இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு மணிகண்டன் 1வது பிளாட்பாரத்தில் ரோந்து சென்றபோது கைப்பையை கண்டெடுத்தார். அதற்கு யாரும் உரிமை கோராததால் திறந்து சோதனை செய்தார். அதில் 50 பவுன் நகைகள், ரூ.11 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் இருந்தது. அதை போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ்காரர் மகாராஜனிடம் ஒப்படைத்தார். இதற்கிடையே வீட்டிற்கு சென்ற ரவிக்குமார் நகைகள் வைத்திருந்த கைப்பை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மனைவியுடன் ரயில் நிலையம் சென்று தேடினார்.

அங்கு கைப்பை இல்லாததால், அதிலிருந்த செல்போன் எண்ணுக்கு அழைத்தபோது, போனை எடுத்த போலீசார் கைப்பை போலீஸ் ஸ்டேசனில் இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக மனைவியுடன் அங்கு சென்ற ரவிக்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி 50 பவுன் நகை, 11 ஆயிரம் ரொக்கம், செல்போனுடன் கைப்பையை கொடுத்தனர். நேர்மையாக செயல்பட்ட ஏட்டு மணிகண்டனை சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் சவ்ரவ் குமார் பாராட்டி ரொக்க பரிசு வழங்கினார்.

Advertisement