மதுரையில் சினிமா பாணியில் துணிகரம்; சென்னை கணவரை தாக்கி புதுப்பெண் காரில் கடத்தல்: 4 பேர் கும்பலுக்கு வலை
விடத்தகுளம்-திருமங்கலம் ரோட்டில் சுங்குராம்பட்டி கிராமம் அருகே வந்தபோது பஸ் ஸ்டாப்பில் கார் ஒன்று நின்றிருந்தது. கார் அருகே நின்றிருந்த 30 வயது மதிக்கத்தக்க மூவர் திடீரென சாலையின் குறுக்கே வந்து விஜயபிரகாஷை வழிமறித்து திடீரென சரமாரி தாக்கினர். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். விஜயபிரகாஷ் கண்முன்னே அவரது மனைவி சுபலெட்சுமியை பிடித்து தரதரவென இழுத்து சென்று காரில் ஏற்றினர். காரில் தயாராக இருந்த டிரைவர் கண் இமைக்கும் நேரத்தில் திருமங்கலம் நோக்கி ஓட்டி சென்றார்.
இதுகுறித்து விஜயபிரகாஷ் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கணவரை தாக்கி சினிமா பாணியில் புதுப்பெண் கடத்தப்பட்ட சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.