தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கியது

சோளிங்கர்: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பராமரிப்பு பணிகள் முடிந்து ரோப்கார் சேவை இன்று மீண்டும் தொடங்கியது. ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. மலைமீதுள்ள இக்கோயிலுக்கு படிக்கட்டுகள் வழியாக சென்று சுவாமியை தரிசிக்க வேண்டும். ஆனால் படி ஏற முடியாத நிலையில் உள்ள வயதானவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் உள்ளிட்டவர்கள் சுவாமியை தரிசிக்க முடியாமல் தவித்தனர். எனவே பக்தர்களின் கோரிக்கை ஏற்ற தமிழக அரசு ரோப்கார் சேவையை கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

இதற்கு கட்டணமாக மலை ஏறுவதற்கு ரூ.50 மலையில் இருந்து இறங்குவதற்கு ரூ.50 வசூலிக்கப்படுகிறது. மாதந்தோறும் பராமரிப்பு பணி காரணமாக 2 அல்லது 3 நாட்கள் ரோப்கார் சேவை நிறுத்துவது வழக்கம். அதன்படி இம்மாதம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த 24, 25ம் தேதிகளில் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து இன்று காலை முதல் ரோப் கார் சேவை வழக்கம்போல் இயங்கி வருகிறது. இதையடுத்து பக்தர்கள் ரோப் காரில் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related News