தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சதுரகிரி மலைப்பாதையில் சிறகடிக்கும் அரிய வகை இலங்கை வண்ணத்துப்பூச்சி

Advertisement

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் வாழைத்தோட்டம் என்னும் மலைப்பகுதி உள்ளது. இப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லலாம். கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழியாகச் சென்ற மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர், கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் அரியவகை ‘இலங்கை ஐந்து வளையன் என்னும் வண்ணத்துப்பூச்சி’ இருப்பதைப் பார்த்து ஆவணம் செய்துள்ளனர். இது குறித்து குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ச.குமரேசன் கூறியதாவது: மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை தொடர்ச்சியாக மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று களஆய்வு செய்து, மாவட்டத்தின் பல்லுயிரியச் சூழலை ஆவணம் செய்து வருகிறது. இதன் நீட்சியாக கடந்த மாதம், சதுரகிரி மலைப்பாதையில் ‘இலங்கை ஐந்து வளையன் வண்ணத்துப்பூச்சியை பார்த்து ஆவணம் செய்தது.

இந்த வண்ணத்துப்பூச்சி இலங்கை மற்றும் தீபகற்ப தென்னிந்திய பகுதிகளில் மட்டும் காணப்படும். இது ஒரு அரிய வகை உயிரினமாகும். பொதுவாக இவை புல்வெளிகள் நிறைத்த மலைப்பகுதிகளில் காணப்படும். கோவை, ஈரோடு மாவட்ட வனப்பகுதியிலும், மேகமலை வனப்பகுதியிலும் ஏற்கனவே ஆவணம் செய்யப்பட்டுள்ளது. சதுரகிரி மலைப்பாதையில் கடந்த மாத இறுதியில் மஞ்சள் கறுப்புச் சிறகன், வரி ஐந்து வளையன், மலபார் புள்ளி இலையொட்டி, சிறு கருமஞ்சள் துள்ளி, மரபழுப்பன், பெருங்கண் புதர் பழுப்பு வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட 52 வகையான வண்ணத்துப்பூச்சிகளை ஆவணம் செய்தோம். சதுரகிரி மலை ஆன்மீகத் தளம் மட்டுமல்ல, அது ஒரு பல்லுயிரி பசுமைத்தளம் என்பதற்கான சான்றாகும். மதுரை மாவட்டத்தில் இதுவரை 164 வகை வண்ணத்துபூச்சிகளை எங்கள் குழுவினர் ஆவணம் செய்துள்ளனர்.

வண்ணத்துபூச்சிகள்-இயல்தாவரங்கள்-சுற்றுச்சூழலுக்கு இடையே உள்ள உறவை மாணவர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், இயல் தாவர வண்ணத்துபூச்சிகள் பூங்கா ஒன்றை மதுரையில் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கும், வன அலுவலருக்கும் கோரிக்கை மனு கொடுத்து இருக்கிறோம்’ என்றார்.

Advertisement

Related News