தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அம்மாவை சாகடிச்சுட்டு ஓட்டு கேட்குறீங்களே... : அதிமுக வேட்பாளரை சீண்டிய மன்சூர் அலிகான்

வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பசுபதியை ஆதரித்து வேலூர் புறநகர் மாவட்டம் அதிமுக செயலாளர் வேலழகன் நேற்று குருவராஜபாளையம் பஸ்நிலையம் அருகே திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். இந்நிலையில், வேலூர் தொகுதில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் வேப்பங்குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, குருவராஜபாளையத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்த அதிமுக வேட்பாளர் பசுபதியை பார்த்து மன்சூர் அலிகான், ‘வணக்கம் பசுபதி சார் அவர்களே..

தோற்று போக போகும் நீங்கள் வாக்கு சேகரித்துக் கொண்டு இருக்குறீர்களே, நீங்கள் தோற்பதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று நக்கலாக கிண்டல் செய்தார். அம்மாவை சாகடித்து விட்டு வாக்கு சேகரிக்கிறீர்களே என்று கூறி கொண்டே வேனில் நின்றபடி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் பைக்கில் மன்சூர் அலிகான் வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர். அதற்குள் அவர் வேப்பங்குப்பத்தில் உள்ள பள்ளிவாசல் உள்ளே தொழுகை செய்வதற்காக சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகிகள் பள்ளிவாசல் முன் நின்று அதிமுக கட்சியை தவறாக பேசிய மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

Related News