தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மகாதேவ் சூதாட்ட செயலி மோசடி வழக்கில் நடிகர் சாகில் கான் கைது: சிறப்பு புலனாய்வு குழு போலீசார் அதிரடி

மும்பை: மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகர் சாகில் கானை சத்தீஸ்கரில் வைத்து மும்பை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்துள்ளனர். மகாதேவ் என்ற சூதாட்ட செயலி மூலம் பொதுமக்களை ஏமாற்றி ரூ.15,000 கோடி மோசடி நடைபெற்றதாக எழுந்த புகாரில் மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரும், அமலாக்கத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 31 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் நடிகர் சாகில் கானும் ஒருவர். ஸ்டைல், எக்ஸ்கியூஸ் மி உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் யூடியூபருமான சாகில் கான், மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கினார். இந்த செயலியை விளம்பரப்படுத்தியதன் மூலம் பெரும் லாபம் ஈட்டியதாக, சாகில் கான் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சாகில் கானுக்கு கடந்தாண்டு டிசம்பரில் முதன்முதலில் சம்மன் அனுப்பப்பட்டது. எனினும் அவர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, போலீசில் ஆஜராவதில் இருந்து தப்பித்து வந்தார். அண்மையில் இவரது முன்ஜாமீன் மனுவை அமர்வு நீதிமன்றம் நிராகரித்ததால் வேறு வழியின்றி போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 3 மணி நேரம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர், இவர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறி அவரது மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அதன் பிறகு, சாகில் கான் தலைமறைவானார்.

மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கு போலீசார் சென்ற போது அவரை காணவில்லை. பலமுறை முயற்சித்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் அறிவித்தனர். பின்னர், சாகில் கான் சத்தீஸ்கரில் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலாக சத்தீஸ்கர் போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கிய மும்பை சைபர் செல் சிறப்பு புலனாய்வு குழு போலீசார், சத்தீஸ்கரில் உள்ள ஜக்தால்பூரில் வைத்து சனிக்கிழமை அன்று சாகில் கானை கைது செய்தனர். அவரை மும்பைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.