எண்ணெய் வழியும் சருமத்திற்கு 8 டிப்ஸ்
என்ன செய்துப் பார்த்தும் எண்ணெய் வழியுற முகம் மட்டுமே என்று அலுத்துக் கொள்பவரா நீங்கள்? கவலைய விடுங்க. இதோ இயற்கையிலேயே மிகச்சிறந்த எட்டு டிப்ஸ்கள்.
*தக்காளிப் பழச் சாற்றை முகத்தில் பூசி காய்ந்த பின் கழுவினால் எண்ணெய்த் தன்மை கட்டுப்பட்டுவிடும். தக்காளியுடன் வெள்ளரிப் பழத்தை அல்லது ஓட்சை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தாலும் முகத்தில் இருக்கும் எண்ணெய்ப் பிசுபிசுப்பு நாளடைவில் நீங்கி விடும்.
*எண்ணெய்த் தன்மையான சருமத்தை உடையவர்கள் முகத்தில் சந்தனம் அரைத்துப் பூசி சிறிது நேரத்திற்குப் பின் கழுவி வந்தால் எண்ணெய்த் தன்மைகுறையும்.
*சோள மாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்தின் பின் கழுவினால் முகத்தில் எண்ணெய்த் தன்மை நீங்கும்.
*வெள்ளரிக் காயைத் தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் சுரக்கும் எண்ணெயானது கட்டுப்படும். வெள்ளரிச் சாறுடன் பால் பவுடரைக் கலந்து பூசினாலும் எண்ணெய்த் தன்மையின்றி முகம் பிரகாசமாகக்காணப்படும்.
*எண்ணெய்த் தன்மையுள்ள சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தைக் கழுவ சோப்புக்குப் பதிலாக பயத்த மாவு பயன்படுத்தலாம். எண்ணெய்த் தன்மை குறைவதோடு முகமும் பளபளப்பாகும்.
*பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன் கேரட் துருவலைக் கலந்து முகத்தில் பூசினால் எண்ணெய்ச்சுரப்பது குறைந்துவிடும்.மேலும் கேரட்டால் பொன் நிறமான சருமம் கிடைக்கும்.
*வெள்ளரிச் சாறு, எலுமிச்சை சாறு, சந்தனப் பவுடர், தயிர், பாதாம் பவுடர், உருளைக் கிழங்குச் சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து முகத்தில் பூசி சிறிது நேரத்திற்குப்பின் குளிர்ந்த நீரில் கழுவ எண்ணெய்ப் பசை முகத்திற்கு குட்பை சொல்லலாம்.
*கஸ்தூரி மஞ்சள், சந்தனம் சேர்த்து முகத்தில் தடவ எண்ணெய்ப் பசை மறைவதோடு, எண்ணெய்ப் பசையால் உண்டாகும் பருக்களும் சேர்ந்து சரியாகும்.