தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முகம் பளபளப்பாக இருக்க இந்த 2 போதும்!

நன்றி குங்குமம் தோழி

முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். அதற்காக கெமிக்கல் நிறைந்த விலையுயர்ந்த கிரீம்களை நிறைய பயன்படுத்துவோம். இதனை பயன்படுத்தும் போது அப்பொழுது ரிசல்டை கொடுத்தாலும் நாளடைவில் அவை முகத்தில் பிரச்னையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான வழிமுறைதான் சிறந்தது. சிலர் முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். இயற்கையான பொருட்களை பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும் என்பது தெரியும். ஆனால், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது நமக்குத் தெரிவதில்லை. இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை எவ்வாறு பயன்படுத்தினால் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும் என்பதனை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...

* ஒரு கிண்ணத்தில் பால் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர், உங்கள் முகத்தை ஒருமுறை கழுவி நன்றாக துடைத்த பின்னர் தயாரித்து வைத்துள்ள பால், தேன் மற்றும் மஞ்சள் தூள் கலவையை முகத்தில் நன்றாக தடவி 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை வாரத்திற்கு இருமுறை செய்தால் போதும் உங்கள் முகம் கரும்புள்ளிகள் அற்று தெளிவாக மாறும்.

* முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்துகொள்ளவும். பின்னர் அதனை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் பால், கடலை மாவு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இந்த அரைத்த கலவையை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் பிறகு கழுவினால் உங்கள் முகத்தில் மாற்றங்கள் ஏற்படுவதை உணருவீர்கள். இதனை வாரத்திற்கு இருமுறை செய்வதன் மூலம் சிறந்த பலன்களை பெறலாம்.

- கவிதா பாலாஜிகணேஷ், சிதம்பரம்.