தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேடு, ராஜமங்கலம் பகுதியில் பொது மக்கள், ரவுடியை வெட்டிய 5 பேர் காவல் நிலையத்தில் சரண்

அண்ணாநகர்: சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கணேசன் (எ) ஆட்டோ கணசேன்(37). இவர் நேற்றுமுன்தினம் இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே நின்றபோது 2 பைக்குகள், ஆட்டோவில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கணேசனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த ரவுடி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு பின்னர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.

Advertisement

இதுபோல், ராஜமங்கலம் சிவசக்திநகர் பகுதியை சேர்ந்த சந்திரா(52), அவரது மகன் ராமேஷ் ஆகியோரை வெட்டிவிட்டு கும்பல் தப்பியது. இதன்பின்னர் கொளத்தூர் கிரிஜா நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (35), தமிழ்ச்செல்வன் (25), மனோஜ் கிரண் (32), விஷால் ஆகிய 4 பேரையும் வெட்டிவிட்டு தப்பினர். இதுசம்பந்தமாக கோயம்பேடு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், நேற்றிரவு கோயம்பேடு காவல் நிலையத்தில் பிரபல ரவுடி மாசி(எ) அமாவாசை விக்கி (28), இவரது கூட்டாளிகள் சின்ன ஜீவா(20), சின்ன கருப்பு(19) பெரிய கருப்பு(20), முத்தையா(22) ஆகியோர் சரணடைந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல ரவுடி விக்கி கூறியதாவது;

குண்டாஸ் வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் 31ம்தேதி ஜாமீனில் வெளியே வந்தேன். ரவுடி ஆட்டோ கணேசன், ராஜமங்கலம் பகுதியை சேர்ந்த ரவுடி ஆகாஷ் ஆகியோர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் என்னை கொலை செய்வதற்கு திட்டம் போடுவதை அறிந்து கொண்டேன். எனவே, அதற்கு முன்பே கணேசனை கொன்றுவிட வேண்டும் என்று கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆகாஷை தேடிசென்றபோது அவர் இல்லை என்றதால் ஆத்திரம் அடைந்தோம். அப்போதுதான் சந்திரா என்பவர் நீங்கள் யாருப்பா என்று கேட்டபோது அவரது தலையில் வெட்டினோம். தடுக்கவந்த அவரது மகனையும் வெட்டினோம். ராஜேஷை கத்தியால் வெட்டிவிட்டு பின்னர் கொளத்தூர் பகுதியில் பைக்கில் நின்றுகொண்டிருந்த 4 பேரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றோம். இதன்பிறகு கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து ரவுடி கணேசனை வெட்டினோம். ஆனால் அவர் தப்பித்து பிழைத்துவிட்டார்.

இவ்வாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து ரவுடிகள் 5 பேர் மீது வழக்குபதிவு செய்து இன்று காலை புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News