தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீர் பாட்டிலால் தாக்கி கொண்ட வாலிபர்கள்

 

Advertisement

சேலம், ஆக.10: சேலம் அஸ்தம்பட்டி கண்ணன்காடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுரேஷ் மகன் மான் (எ) மணிகண்டன் (29). இவர் கடந்த 7ம் தேதி இரவு 10 மணியளவில், தனது வீட்டின் முன்பு இருந்துள்ளார். அப்போது ஜான்சன்பேட்டை அன்புநகரை சேர்ந்த துரை மகன் மோகன் (எ) பீட்டர் (20) வந்துள்ளார். அவர், தனது உறவினர் வீடு குறித்து மணிகண்டனிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய் தகராறு முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக் கொண்டனர். அப்போது மோகன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால், மணிகண்டனின் தலையில் பலமாக தாக்கி, குத்தினார். உடனே அவர், அந்த பாட்டிலை பறித்து மோகன் மீது தாக்கினார். இதில் இருவருக்கும் ரத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் வந்து, தகராறை விலக்கி விட்டனர்.

தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டனை, அவரது உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அஸ்தம்பட்டி போலீஸ் எஸ்ஐ மாணிக்கம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, இருவரின் புகாரின் பேரிலும் வழக்குப்பதிவு செய்தனர். மணிகண்டன் புகாரில் பதியப்பட்ட வழக்கில், மோகனை போலீசார் கைது செய்தனர். அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News