தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிளேடால் நண்பரை கிழித்துவிட்டு கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்: போலீஸ் விசாரணையில் பரபரப்பு

சென்னை, ஆக. 1: சென்னையில் இருந்து கடலூருக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் பிளேடால் இருவரையும் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திரு.வி.க நகரை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சரவணன் (30). சென்னை செங்குன்றத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் மாணிக்கராஜ் (38). இவர்கள் இருவரையும் சென்னை கிளாம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், ஒரு குற்ற வழக்கு தொடர்பாக, விசாரணை செய்தபோது மற்றொரு குற்றவாளி கடலூரில் இருப்பதாக கூறினர். இதையடுத்து இருவரையும் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் கடலூருக்கு அழைத்து வந்து, கடலூர் பாரதி சாலையில் உள்ள ஒரு வணிக வளாகம் அருகே வைத்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது, சரவணன், என்னை காட்டி கொடுத்துவிட்டாயே என்று மாணிக்கராஜை பிளேடால் கிழித்து விட்டு, தன்னைத்தானே கழுத்தில் பிளேடால் கிழித்துக்கொண்டார். இதனால் இருவர் உடலிலும் ரத்தம் கொட்டியது. இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் சரவணன் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சரவணன் திடீரென அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி சென்று விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement