தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தேனி அருகே கைலாசபட்டியில் சாலை தடுப்புச்சுவரில் மோதி வாலிபர் பலி

 

உறவினர்கள் சாலை மறியல்

தேனி, ஜூலை 2: பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவற்றில் டூவீலர் மோதியதில் வாலிபர் பலியானது சம்பந்தமாக வாலிபரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் அருகே கைலாபட்டியை சேர்ந்தவர் விஜயக்குமார்(43), இவர் நேற்று முன்தினம் டூவீலரில் வந்தபோது, கைலாசபட்டியில் உள்ள திண்டுக்கல்-தேனி மாநில நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

விஜயக்குமார் உயிரிழந்தது குறித்து அறிந்த உறவினர்கள், சம்பவ இடத்திற்கு வந்து விஜயகுமாரை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால்தான் விபத்து ஏற்பட்டதாக கருதி விபத்துக்கு காரணமான வாகனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர்.இதனையடுத்து, பெரியகுளம் தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்த விஜயக்குமாரின் பிரேத உடலை பிரேத பரிசோதனைக்கு பெரியகுளம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இவ்விபத்து குறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.